சேலம் மாவட்டம் ஓமலூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நடிகர்கள் கட்சித் தொடங்குவது மற்றும் கமல் அரசியலில் ஈடுபட்டிருப்பது தொடர்பாக காரசாரமாக பேட்டி அளித்தார்.
அதில், மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதிமய்யம் பெற்ற வாக்குகள் எவ்வளவு? என்றும் மிகப்பெரிய நடிகராக பெயர் எடுத்தவர் சிவாஜி. ஆனால் அவர் அரசியல் கட்சி ஆரம்பித்தபோது என்ன நடந்தது? சிவாஜி கணேசனின் நிலைமைதான் மற்ற நடிகர்களுக்கும் வரும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் முதல்வரின் இக்கருத்திற்கு சிவாஜி சமூக நலப் பேரவையினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.