கனமழை: திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு 

தொடர்மழை காரணமாக திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகள் இன்று நடைபெறவிருந்த தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக
கனமழை: திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு 


வேலூர்: தொடர்மழை காரணமாக திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகள் இன்று நடைபெறவிருந்த தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அறிவித்துள்ளார். 

தமிழகம் முழுவதும் நேற்று முதல் மிதமான மழை பெய்து வரும் நிலையில், இன்று வியாழக்கிழமை அதிகாலை (நவ.28) முதல் சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும்,   காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டங்களிலும் தொடர் மழை பெய்து வருகிறது.

இதையடுத்து  காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டங்களுக்கு இன்று (நவ.28) விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ள நிலையில்,  சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்து தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பாண்டியன் அறிவித்துள்ளார். 

இந்நிலையில், வேலூரில் உள்ள திருவள்ளுவர் அரசு பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக  பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அறிவித்துள்ளார்.

மேலும்  இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்வுகள் டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com