சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஜமீன்சல்வார்பட்டியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
ஜமீன்சல்வார்பட்டியில் பட்டாசு ஆலை ஒன்றில் பட்டாசு தயாரிப்பு பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.
இந்நிலையில், பட்டாசு தயாரிக்கப்பட்ட அறையில் இன்று காலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறன்றனர்.
இதனிடையே, இந்த விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. வெடி விபத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.