லலிதா ஜுவல்லரியில் கொள்ளை அடிக்கப்பட்ட நகைகளில் 11 கிலோ நகை மீட்பா?

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் அக்டோபா் 2 ஆம் தேதி ரூ. 13 கோடி மதிப்புள்ள தங்க மற்றும்
லலிதா ஜுவல்லரியில் கொள்ளை அடிக்கப்பட்ட நகைகளில் 11 கிலோ நகை மீட்பா?



திருச்சி: திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் 11 கிலோ நகை மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் அக்டோபா் 2 ஆம் தேதி ரூ. 13 கோடி மதிப்புள்ள தங்க மற்றும் வைர நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். இது குறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து, தனிப்படை அமைத்து மா்ம நபா்களை தேடி வந்தனா்.

இதையடுத்து அக்டோபா் 3 ஆம் தேதி திருவாரூரில் இருசக்கரவாகனத்தில் சென்ற இருவரை பிடித்து விசாரித்தபோது ஒருவா் தப்பிச்சென்றுவிட்டார். மற்றொருவரை பிடித்து போலீஸார் விசாரித்தபோது, திருச்சி நகைக்கடையில் திருடியவா்கள் என்று தெரிந்தது. இதில், பிடிபட்டவா் திருவாரூா் மாவட்டம் மடப்புரத்தைச் சோ்ந்த மணிகண்டன் என்றும் தப்பியோடியவா் சுரேஷ் என்றும் தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டனை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 4 கிலோ தங்க நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனா்.

அதைத் தொடா்ந்து சுமார் 10க்கும் மேற்பட்டோரிடம் நடத்திய விசாரணையில் தப்பியோடிய சுரேஷ் மற்றும் அவரது உறவினா் முருகன் ஆகிய இருவரும் தான் திருட்டு சம்பவத்தில் முக்கியமானவா்கள் என தெரியவந்தது. இதில் முருகனின் சகோதரி கனகவல்லியின் மகன்தான் சுரேஷ் என்பது தெரிந்தது. இதையடுத்து கனகவல்லியையும் போலீஸார் கைது செய்தனா். இதையடுத்து திருவண்ணாமலை அருகேயுள்ள செங்கம் நீதிமன்றத்தில் சுரேஷ் கடந்த வியாழக்கிழமை சரணடைந்தார். தொடா்ந்து இச்சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட முருகனை தனிப்படை போலீஸார் தேடிவந்தனா்.

இந்நிலையில், தேடப்பட்டு வந்த முருகன் பெங்களூரில் உள்ள 11- ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி நாகம்மா முன்பு வெள்ளிக்கிழமை சரணடைந்தார். அவரை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் முருகன் அடைக்கப்பட்டார்.

சரணடைந்த முருகன் மீது பெங்களூரு பானஸ்வாடி காவல் நிலையத்தில் 65 வழக்குகளும், பெங்களூரு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் 115 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2015-இல் எச்.பி.ஆா் லேஅவுட்டில் ரூ. 48 ஆயிரம் மதிப்புள்ள தங்கநகை திருடிய வழக்கில் முருகன் கைது செய்யப்பட்டார். பின்னா் ஜாமீனில் வெளியே வந்த அவா், தனது கூட்டாளிகளுடன் இணைந்து தொடா்ந்து இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள முருகனிடம், திருச்சி தனிப்படை போலீஸார் விரைவில் விசாரிப்பார்கள் எனக் கூறப்படுகிறது.

இதனிடையே, நகைக்கடையில் கொள்ளையடித்த நகைகளில் ஒரு கிலோ நகைகளை கொள்ளையன் சுரேஷ் மதுரையில் உள்ள வியாபாரி ஒருவரிடம் விற்று முன்பணமாக ரூ.7 லட்சம் பெற்றது தனிப்படை போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அக்டோபர் 14 ஆம் தேதி திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் சுரேஷை ஆஜர்படுத்தி காவலில் விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

முருகன் மீது ஏற்கெனவே பெங்களூருவில் பல்வேறு கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அங்கு கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் தொடர்பாக முருகனிடம் அம்மாநில போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, திருச்சி மற்றும் பெரம்பலூரில் நகைகளைப் பதுக்கி வைத்திருப்பதாக முருகன் தெரிவித்ததை அடுத்து, முருகனை அழைத்துக் கொண்டு தமிழகம் வந்த கர்நாடக போலீஸார், திருச்சி மற்றும் பெரம்பலூரில் முருகன் சொன்ன இடங்களில் எல்லாம் சோதனை நடத்தி நகைகளை பறிமுதல் செய்துகொண்டு பெங்களூரு போலீஸார் கர்நாடகா திரும்பினர். இது குறித்த தகவல் திருச்சி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

ஒருவேளை அவர்கள் பறிமுதல் செய்த நகைகள், லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடித்ததாக இருக்கக் கூடும் என்று சந்தேகம் எழவே, வழியிலேயே பெங்களூரு போலீஸாரை நிறுத்த முயற்சித்து முடியாததால், பெங்களூரு போலீஸார் பெரம்பலூர் வழியாக செல்வதாக தெரிந்ததை அடுத்து, திருச்சி போலீஸார் பெரம்பலூர் போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.  

திருச்சி போலீஸார் அளித்த தகவலின் பேரில், பெங்களூரு நோக்கிச் சென்றுகொண்டிருந்த கர்நாடக போலீஸாரின் காரை, வாலிகண்டபுரம் என்ற இடத்தில் வைத்து துரத்திச் சென்று மறித்த பெரம்பலூர் போலீஸார், பறிமுதல் செய்த நகைகள் மற்றும் முருகனோடு, கர்நாடக போலீஸாரை, எளம்பலூர் தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள ஆயுதப் படை வளாகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு வைத்து நகைகள் தொடர்பாக விசாரணை நடைபெற்றது. அப்போது, அந்த நகைகள் லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்டவை என்பது உறுதிப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த நகைகளை எடை போட்டதில் 11 கிலோ என தெரியவந்துள்ளது.

இதனிடையே, முருகனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நகைகளை அடையாளம் காட்டுவதற்காக திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கடை மேலாளர் உள்ளிட்ட ஊழியர்கள் பெரம்பலூர் ஆயுதப் படை வளாகத்திற்கு வரவழைக்கப்பட்டனர். கடை நகைகளை அவர்கள் அடையாளம் காட்டி உறுதிப்படுத்தியதாக காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதனைத்தொடர்ந்து, கொள்ளையன் முருகனை ரகசிய இடத்திற்கு அழைத்து சென்று, தமிழக மற்றும் பெங்களூரு போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com