நியூயார்க்: அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் பகுதியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள புரூக்ளின் பகுதியில் இன்று சனிக்கிழமை(அக்டோர் 12) மர்ம நபர்கள் திடீரென நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.