தூத்துக்குடி: துப்பாக்கிச்சூடு வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மே 22 ஆம் தேதி துத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற பேரணியின்போது வன்முறை ஏற்பட்டது. வன்முறையை கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு மாணவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது.
இந்த விசாரணை ஆணையத்தின் 15 ஆம் கட்ட விசாரணை நாளை தொடங்க உள்ளது. இந்த விசாரணையில் ஆஜராகுமாறு 19 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், தூத்துக்குடியில் உள்ள அலுவலகத்தில் நாளை ஆஜராக சீமானுக்கு அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
மேலும் தூத்துக்குடி திமுக சட்டப்பேரவை உறுப்பினரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கீதா ஜீவனுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.