நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் அஜ்மல் என்பவர் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை (அக்.31) அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அஜ்மல் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அஜ்மல் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோன்று கோவையில் 2 இடங்களிலும், இளையான்குடி, திருச்சி, காயல்பட்டிணம் பகுதிகளிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.