புதுதில்லி: தில்லியில் நேற்றிரவு 4 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
தில்லி சீலாம்பூர் பகுதியில் நேற்றிரவு 4 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விபத்துக்குள்ளானது. இந்த இடிபாடுகளுக்குள் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறினார்.