தமிழகத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்ற பேச்சே எழவில்லை: கே.எஸ். அழகிரி பேட்டி

தமிழகத்திலே காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்ற பேச்சே எழவில்லை என்றும் நடந்தது கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் அங்கு அவ்வாறு
தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி
தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி


தூத்துக்குடி: தமிழகத்திலே காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்ற பேச்சே எழவில்லை என்றும் நடந்தது கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் அங்கு அவ்வாறு தான் பேச வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்தார். 

நாங்குநேரியில் காங்கிரஸ் கமிட்டி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கே.எஸ். அழகிரி பேசுகையில், தனித்து போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா என்பதை பற்றி விவாதம் நடத்தவே இந்த கூட்டம் நடைபெறுகிறது. குறைந்தபட்சம் தெருவில் நடக்கும் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற முடியுமா? என ஆராய வேண்டும். வாக்குச்சாவடியை கைப்பற்ற முடியாவிட்டாலும் பாதுகாக்கும் ஆற்றல் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறதா? மற்ற கட்சிகளைப் போல காங்கிரஸ் கட்சி கட்டுப்பாடு இல்லாத இயக்கமாக இருக்கிறது. 

காங்கிரஸின் மேடையை கூட சரிசெய்ய முடியாத நிலையில்தான் கட்சி இருக்கிறது. கூட்டணி இன்றி காங்கிரஸ் கட்சியால் வெற்றிபெற முடியாதா? 50 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருப்பது ஏன்? கூட்டணி இன்றி வெற்றிபெற முடியாதா? என அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அழகிரி. தென் தமிழகம் என்பது காங்கிரஸ் கட்சியின் வேர், உயிர்நாடி என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், துத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நாங்குநேரியில் தமிழகத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்ற பேச்சே எழவில்லை. அங்கு நடைபெற்றது செயல்வீரர்கள் கூட்டம், அங்கு அவ்வாறு தான் பேச வேண்டும். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்றே பேசினோம். நாங்குநேரியில் இடைத்தேர்தல் தேதி அறிவித்த பின் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com