முன்னாள் பிரேசில் அணி கேப்டனும், இரண்டு முறை உலகக் கோப்பை வென்றவருமான கால் பந்து வீரரான காஃபு வின் 30 வயது மகன் மாரடைப்பால் இன்று உயிரிழந்தார்.
கால் பந்து வீர்ரான காஃபுவின் மகனான டானிலோ ஃபெலிசியானோ அவரது இல்லத்தின் அருகில் கால் பந்து விளையாடிக்கொண்டிருந்த போது அவருக்கு திடிரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில் அவர் அங்கு பரிதாபமாக உயிரிழந்தார். இவரது இந்த இரப்பிற்கு உலகெங்கிளும் உள்ள கால் பந்து அணிகள் தங்களது வருத்தத்தை தெரிவித்துள்ளன.
அதேபோல் ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியமும் காஃபுவின் மகனது இறப்பிற்கு வருத்தம் தெரிவித்து தனது டிவிட்டர் பக்கதில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளது.