விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் இயங்கி வரும் விசைத்தறி கூடத்தில் மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த ஆதிநாராயணன் என்பவருக்கு சொந்தமான விசைத்தறி கூடத்தின் மீது மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமோ, உயிர் சேதமுமோ ஏற்படவில்லை.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் வழக்கு பதிவு செய்து நாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.