சென்னை விமான நிலையத்தில் ரூ. 26 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில், சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 26 லட்சம் மதிப்பிலான தங்கநகைகளை சுங்கத்துறை அதிகாரிகள் இன்று


சென்னை விமான நிலையத்தில், சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 26 லட்சம் மதிப்பிலான தங்கநகைகளை சுங்கத்துறை அதிகாரிகள் இன்று சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

சிங்கப்பூரில் இருந்து இன்று சனிக்கிழமை சென்னை வந்த விமானங்களில் பயணித்த பயணிகளின் உடைமைகளை, சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது காயத்தரசி, முகமது சலீம் ஆகிய இருவர் மீதும் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து இருவரிடமும் மேற்கொண்ட சோதனையில், அவர்களது உடமைகளில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதில் அவரிகளிடம் இருந்து ரூ.22.06 லட்சம் மதிப்புடைய தங்கத்தை சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com