நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தந்தையைக் கொன்றுவிட்டு 25 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்தவர் கைது

காரைக்கால் அருகே தந்தையைக் கொலை செய்த வழக்கில் 25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த மகனைக் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News image

தந்தையைக் கொன்றுவிட்டு 25 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த அடைக்கலதாஸ்

Updated On :26 ஆகஸ்ட் 2020, 12:30 pm

DIN

காரைக்கால் :  காரைக்கால் அருகே தந்தையைக் கொலை செய்த வழக்கில் 25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த மகனைக் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கடம்பங்குடி பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவர் தனது மனைவி மற்றும் மகன் அடைக்கலதாஸ் ஆகியோருடன் கடந்த 1990-ம் ஆண்டு காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு பகுதிக்கு வந்து தங்கிக் கூலி வேலை செய்து வந்துள்ளார்.

அப்போது தந்தைக்கும் மகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. பின்னர் ஒரு நாள் திடீரென தந்தை ராஜமாணிக்கம் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார். புகாரின்பேரில் திருநள்ளாறு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில், தந்தையை அடித்துக் கொலை செய்து, தூக்கில் தொங்கவிட்டு நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறை அடைக்கலதாஸ் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  சிறையில் அடைத்தனர்.

பின்னர் 1994-ம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்தவர், வழக்கில் ஆஜராகாமல் தலைமறைவானார். இதனால் காரைக்கால் நீதிமன்றம் அவரை தலைமறைவான குற்றவாளி என அறிவித்தது. அவரை கண்டுபிடிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து திருநள்ளாறு காவல் ஆய்வாளர் பாலமுருகன்,  உதவி ஆய்வாளர் பிரவீன்குமார் தலைமையிலான காவலர்கள் தீவிரமாக அவரை தேடி வந்தனர். சொந்த ஊரான கடம்பங்குடியில் அவர் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், காவலர்கள் அங்கு சென்று அடைக்கலதாஸை (வயது 53) செவ்வாய்க்கிழமை கைது செய்து காரைக்கால் அழைத்துவந்தனர்.

காரைக்கால் மாவட்ட நீதிபதி கார்த்தியேகன் முன்பு புதன்கிழமை ஆஜர்படுத்தினர். விசாரணை செய்த நீதிபதி அவரை 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து புதுச்சேரி மத்திய சிறைச்சாலைக்கு கொண்டுச் சென்று அடைக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.