விமானங்களில் உணவுப் பொருள்கள் வழங்க அனுமதி

விமானங்களில் உணவு, தின்பண்டம் மற்றும் பானங்களை வழங்க இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

விமானங்களில் உணவு, தின்பண்டம் மற்றும் பானங்களை வழங்க இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து இந்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், 

உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களில் உணவு, தின்பண்டம் மற்றும் பானங்களை முன்பே தாயர் செய்யப்பட்ட உணவுகளை விமானங்களின் கொள்கைப்படி விநியோகிக்க வேண்டும்.

பயணிகளுக்கு உணவளிக்கும் போது, ஒவ்வொரு இருக்கைகளுக்கும் தனித்தனியே ஒரு முறை உபயோகிக்கக் கூடிய தட்டுகள் போன்றவற்றை தர வேண்டும். ஒருமுறை உபயோகித்தப் பொருளை மறுமுறை உபயோகிக்கக் கூடாது. 

மே 25 முதல் உள்நாட்டு விமானங்களும், மே 7 முதல் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சிறப்பு சர்வதேச விமானங்கலும் மீண்டும் தொடங்கியது. ஆனால் அந்த விமானங்களில் உணவு மற்றும் பானங்கள் விநியோகத்தை இந்திய அரசு தடை செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com