தேசிய அளவிலான கயிறு இழுக்கும் போட்டியில் தமிழக அணி இரண்டாம் இடம் பெற்றுள்ளது.
ஒரே இந்தியா சிறந்த இந்தியா போட்டி இந்தியா முழுவதும் நான்கு பிரிவுகளாக பிரித்து நடைபெற்று வருகின்றது. இதில் மூன்றாவது பிரிவு போட்டியானது உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் மூன்றாவது மண்டலத்திற்கான போட்டி நடைபெற்றது.
இதில் தமிழக மகளிர் அணியினர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று டெல்லி அணியை சந்தித்தது. இறுதிப் போட்டியில் தில்லி அணியிடம் தோல்வி அடைந்து இரண்டாமிடம் பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றனர்.
இப்போட்டியின் பரிசளிப்பு விழாவில் ரூகி சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.