சென்னையில் இன்று சனிக்கிழமை (பிப்.15) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவுமின்றி விற்பனை செய்யப்படுகின்றன.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் 17 முதல் சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் மாற்றியமைத்து விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு காலை 6 மணி முதல் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் விலை அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், டீசல் நேற்றைய விலையில் மாற்றமின்றி பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.74.73 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் டீசல் ரூ.68.40 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து 4 நாட்களாக பெட்ரோல் விலையில் மாற்றமில்லாமல் விற்பனையாகி வருகிறது.