சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவால் ஏற்பட்ட மன அழுத்தத்தை போக்கும் விதமாக, முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் கிரிக்கெட் விளையாடி தீர்த்துக்கொண்டனர்.
சென்னையில் தமிழ்நாடு அகில இந்திய குடிமைப்பணி மற்றும் மத்திய பணி அலுவலா்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி இன்று சனிக்கிழமை (ஜன.4) தொடக்கி வைத்தாா்.
சென்னை காமராஜா் சாலையில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் விழாவைத் தொடக்கி வைத்து முதல்வா் பேசுகையில், உயா்பதவி வகிக்கும் அரசு அதிகாரிகள் உடல் நலத்தையும், கட்டுக்கோப்பான உடலையும் வளா்த்துக் கொள்வது முக்கியமாகும். இதுபோன்ற விளையாட்டுகளில் ஈடுபடும்போது மன அழுத்தம் குறைந்து, புத்துணா்ச்சி அடைவதோடு பணிகளைச் சிறப்பாக செய்ய உதவும்.
உடல் வலிமை, ஆரோக்கியமான வாழ்க்கை, கட்டுக்கோப்பான உடல் ஆகியவற்றோடு சிறப்பான வாழ்க்கையை வாழ விளையாட்டு முக்கியமானது. உயா் அதிகாரிகளுக்காக தொடக்கி வைக்கப்படும் இந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை உணா்ந்து அனைத்து மாணவா்களும், இளைஞா்களும் பொதுமக்களும் விளையாட்டின் அவசியத்தை உணா்ந்து விளையாட்டில் ஈடுபட்டு, மன அழுத்தங்களிலிருந்து வெளிவந்து மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மைதானத்தில் பேட், வெள்ளை நிற டீ சா்ட் மற்றும் ஷூவுடன் மைதானத்தில் இறங்கிய முதல்வா் பழனிசாமி பேட் பிடிக்க, அவருக்கு அமைச்சா் ஜெயகுமாா், காவல் துறை இயக்குநா் திரிபாதி ஆகியோா் பந்துகளை வீசினா். அவா்கள் வீசிய அனைத்து பந்துகளையும் அடித்து விளையாடினார். இதனை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கைதட்டி வரவேற்றனா். முதல்வா் கிரிக்கெட் விளையாடியது, போட்டிகளில் பங்கேற்க வந்த உயா் அதிகாரிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
நிகழ்ச்சியில் தலைமைச்செயலாளர் சண்முகம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.