கூடலுார் அருகே நேற்று சனிக்கிழமை (ஜன.18) அதிகாலையில் இரண்டு புலிகள் சாலையை கடந்து சென்றது.
கூடலுார்- கோழிக்கோடு சாலை மரப்பாலம் பகுதியை சேர்ந்த சிலர், நேற்று சனிக்கிழமை அதிகாலை வழக்கம் போல் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மரப்பாலம் புதிய டிரான்ஸ்பார்மர் அருகே தனியார் தோட்டத்திலிருந்து வந்த இரண்டு புலிகள் 'ஹாயாக' கோழிக்கோடு சாலையை கடந்து சென்றன. நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த சிலர் அதனை பார்த்து ரசித்தனர்.
இதுபகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறுகையில், 'இப்பகுதி சாலையை, இரவில் புலி கடந்து செல்வதை ஏற்கனவே, சிலர் பார்த்துள்ளனர்.
10வது மைல் பகுதியிலும் அதிகாலை நேரங்களில் புலிகள் சாலையை கடந்து செல்கின்றன. குண்டம்புழா வனப்பகுதியிலிருந்து புலிகள் வந்திருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்த அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள், வனத்துறையினர் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் கேட்டுக்கொண்டனர்.
இதையடுத்து வன ஊழியர்கள் அப்பகுதியில் ஆய்வு செய்து சென்றனர்.
சாலையை கடந்து செல்லும் புலிகள் படங்கள்: