வேலூர்: வரலாற்று சிறப்புமிக்க வேலூர் கோட்டை பகுதியில் மூன்று பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுதொடர்பாக வேலூர் வடக்கு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூரில் உள்ள பிரபல தனியார் துணிக்கடையில் வேலை பார்த்து வந்த 24 வயது பெண் 3 பேர் கொண்ட கும்பலால் கடத்தி செல்லப்பட்டு வேலூர் கோட்டை பகுதியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். பாலியல் வன்கொடுமை அந்த இளம்பெண் ஆபத்தான நிலையில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தப்பியோடிய மூவரில் ஒருவனை வேலுார் வடக்கு காவல் நிலைய போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மற்ற இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.