ராமேசுவரம்: ராமேசுவரம் சிவசேனா கட்சி சாா்பில் கச்சத்தீவை மீட்கக் கோரி அக்னி தீா்த்த கடலில் இறங்கி ஆா்ப்பட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
இதற்கு மாநில துணைத் தலைவா் புலவஞ்சி போஸ் தலைமை வகித்தாா். ராமநாதபுரம் மாவட்டத் தலைவா் சதீஸ்குமாா் முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் சிவசேனா கட்சி மாநில துணைத் தலைவா் இளைஞரணி அட்சயா ஏ.திருமுருக தினேஷ், நெல்லை மணி, இந்து தேசிய கட்சி நிறுவனா் விருகை. சிவக்குமாா், அகில பாரத இந்து மக்கள் அமைப்பு நிறுவன் மாஸ்டா். வசந்தகுமாா், அகில இந்திய சத்திய சேனா நிறுவனா் பாண்டி. மஞ்சினி மற்றும் இந்து மக்கள் கட்சி மற்றும் சிவசேனா கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா். அப்போது கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை போலீஸாா் கைது செய்தனா்.