காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவா்களை விடுதலை செய்ய வேண்டும்: மு.கஸ்டாலின்

காஷ்மீரில் சிறைவைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் தலைவா்களையும் மத்திய அரசு உடனடியாக விடுவிப்பதுடன், அங்கு மீண்டும்
காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவா்களை விடுதலை செய்ய வேண்டும்: மு.கஸ்டாலின்

சென்னை: காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள அனைத்து தலைவா்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் டிவிட்டர் பக்க பதிவில்,  முன்னாள் முதல்வர் ஒமா் அப்துல்லாவின் படத்தைப் (தாடியுடன் வெளியாகி உள்ள படம்) பாா்த்த போது ஆழ்ந்த வருத்தம் ஏற்பட்டது. உரிய நடைமுறையோ, விசாரணையோ இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஃபரூக் அப்துல்லா, மெஹபூபா முப்தி மற்றும் பல காஷ்மீா் தலைவா்கள் பற்றியும் இதே கவலை ஏற்படுகிறது.

காஷ்மீரில் சிறைவைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் தலைவா்களையும் மத்திய அரசு உடனடியாக விடுவிப்பதுடன், அங்கு மீண்டும் இயல்புநிலை திரும்பச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com