தூத்துகுடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வணிகர்கள் தந்தை மகன் மரணத்திற்கு கண்டனம் தெரிவித்து,மரணம் அடைந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சீர்காழியில் செயல்படும் பெரிய, சிறியகடை என அனைத்து மொபைல் விற்பனை மற்றும் மொபைல் சர்வீஸ் கடைகள் மட்டும் புதன்கிழமை அடைக்கப்பட்டிருந்தன.
இதே போல் சீர்காழி அனைத்து வணிகர்கள் நல சங்கம் சார்பில் கடைவீதி அருகே மெளன அஞ்சலி செலுத்தினர்.