சென்னையில் பெட்ரோல், டீசல் விலை வியாழக்கிழமையும் குறைந்து விற்பனையாகிறது.
கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தற்போதைய சூழலில் தினமும் அதிகரித்தும், குறைந்தும், மாற்றமின்றியும் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று புதன்கிழமை விற்பனையான விலையில் இருந்து வியாழக்கிழமை (மார்ச் 12) பெட்ரோல், டீசல் விலை குறைந்து விற்பனையாகிறது.
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் புதன்கிழமை விற்பனையான விலையில் இருந்து வியாழக்கிழமை பெட்ரோல் லிட்டருக்கு 16 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.72.86, ஆகவும், டீசல் லிட்டருக்கு 13 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் டீசல் ரூ.66.35 ஆக விற்பனையாகி வருகிறது.
கரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் உலக பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உற்பத்தி - விலைக் குறைப்பில் சவூதிஅரேபியா-ரஷியா இடையே ஏற்பட்டுள்ள போட்டியால் இந்தியாவில் எரிபொருள் விலை குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.