பரமத்திவேலூர்: பரமத்திவேலூரை அடுத்துள்ள பாலப்பட்டியில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான 262 டாஸ்மாக் மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
கரோனா வரைஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள பாலப்பட்டியில் ஒருவர் தனது வீட்டில் ரகசியமாக மது விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் பழனிசாமி, பாலப்பட்டியில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான 262 டாஸ்மாக் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து பாலப்பட்டி பகுதியை சேர்ந்த ஆண்டவர், பன்னீர்செல்வம், கனகராஜ் ஆகியோர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.