ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட வண்ணாம்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் சத்துணவு பணியாளர்களுக்கு கரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மும்தாஜ் தலைமை வகித்தார், ஊத்தங்கரை வட்டாட்சியர் செந்தில்குமரன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு சிவப்பிரகாசம், காரப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் ரமாதேவி கோவிந்தன் ஆகியோர் கலந்துகொண்டு நல உதவிகளை வழங்கினர்.
தன்னார்வலர் எஸ்.அம்ரின்அஸ்லம் தனது சொந்த செலவில் 30 நபர்களுக்கு அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார். நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள் நசீர் பாய், சுமதி, உதவி ஆசிரியர் சண்முகவள்ளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கிய அம்ரின்அஸ்லம் அவர்களுக்கு பள்ளியின் சார்பாக நன்றியை தெரிவித்தனர்.