ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் 24 மதுக்கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டில் 86 கடைகளும், காஞ்சிபுரத்தில் 23 கடைகள் உள்பட மொத்தம் 109 கடைகள் உள்ளன. கரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக 24 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 85 கடைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
சனிக்கிழமை அனைத்து கடைகளிலும் ஊதா நிற டோக்கன் வழங்கப்படுவதாகவும், ஆதார் கார்டுகள் எதுவும் தேவையில்லை என்றும், மது வாங்க வருபவர்கள் 6 அடி இடைவெளி விட்டு மது வாங்கி செல்லுமாறு ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் எஸ். ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.