விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் சனிக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன. மாவட்டத்தில் மொத்தம் 84 கடைகள் திறக்கப்பட்டு காலை 10 மணி முதல் விற்பனை பரபரப்புடன் நடைபெற்று வருகின்றன.
மதுக்கடை திறக்கும் தகவலறிந்த குடிப் பிரியர்கள், காலை 7 மணி முதலே கடைக்கு முன் வரிசையாக திரண்டிருந்தனர்.அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு காலை 10 மணிக்கு விற்பனை தொடங்கியது.
திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டு டாஸ்மாக் கடை முன்பு தனிமனித இடைவெளியை பின்பற்றி குடையுடன் காத்திருக்கும் குடிப் பிரியர்கள் மது பாட்டில்களை வாங்க வெயிலிலும் கவலையின்றி வரிசையில் நின்றிருந்தனர்.