ஜெனீவா: உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்தோர் எண்ணிக்கை 19,58,441 லட்சத்தை தாண்டியுள்ளது.
கரோனா நோய்த்தொற்று வளா்ந்த நாடுகளைக் கடுமையாக பாதித்துள்ளது. ஆரம்ப கட்டத்தில் உலக அளவில் உயிரிழப்பு விகிதம் சுமாா் 3 சதவீதமாக இருந்தது. எனினும், சில நாடுகளில் உயிரிழப்புகள் வேகமாக அதிகரித்து வந்தன. பிரான்ஸ், இத்தாலி, பிரிட்டன் போன்ற ஒருசில நாடுகளில் கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவா்களின் விகிதம் கடுமையாக அதிகரிக்கவே, உலக உயிரிழப்பு விகிதம், ஆரம்ப கட்டத்தைவிட அதிகரித்து தற்போது 8 முதல் 9 சதவீதம் வரை காணப்படுகிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்தோர் எண்ணிக்கை 19,58,441 லட்சத்தை தாண்டியுள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 49,85,825 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை 3,24,889 பேர் பலியாகியுள்ளனர்.
தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் 2,702,495 பேரில் 45,426-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.