தஞ்சாவூர்: தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை காலை ஸ்கூட்டர் மீது லாரி மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.
தஞ்சாவூர் நாகை சாலை தொல்காப்பியர் சதுக்கம் அருகேயுள்ள மோகன்ராம் நகரைச் சேர்ந்தவர் ஆர். ராஜப்பா (75). வல்லம் பகுதியிலுள்ள தனியார் பல்கலைக்கழக உணவகத்தில் வேலை பார்த்து வந்தார்.
இவர் தொல்காப்பியர் சதுக்கம் அருகே வெள்ளிக்கிழமை காலை ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக உர மூட்டைகள் ஏற்றி வரப்பட்ட லாரி இவர் மீது மோதியது. இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த இவர் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கினார். இதில், பலத்தக் காயமடைந்த ராஜப்பா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து நகரப் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவலர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.