விழுப்புரம் அருகே திருவெண்ணெய்நல்லூர் வட்டம், சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஜெயஸ்ரீ(15), குடும்ப முன்விரோதம் காரணமாக கடந்த 10 ஆம் தேதி வீட்டில் எரித்துக் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர்கள் முருகன், கலியபெருமாள் ஆகியோரை காவலர்கள் கைது செய்தனர்.
இவர்கள் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய இவர்கள் இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில், இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை சனிக்கிழமை உத்தரவிட்டார்.