நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஹைதராபாதில் 6 மாதங்களுக்கு பிறகு பேருந்து சேவை

தெலங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாதில் 6 மாதங்களுக்கு பிறகு வெள்ளிக்கிழமை மீண்டும் மாநகரப் பேருந்து சேவை தொடங்கியுள்ளது.

News image

தெலங்கானா மாநிலப் போக்குவரத்து துறை அமைச்சர் பி. அஜய்

Updated On :25 செப்டம்பர் 2020, 10:59 am

DIN

தெலங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாதில் 6 மாதங்களுக்கு பிறகு வெள்ளிக்கிழமை மீண்டும் மாநகரப் பேருந்து சேவை தொடங்கியுள்ளது.

கரோனா தொற்று பரவல் காரணமாக மார்ச் 22 அன்று போடப்பட்ட பொது முடக்கத்தில் இருந்து பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தொற்றின் பரவல் குறைந்ததை அடுத்து இன்று முதல் ஹைதராபாதில் பேருந்து சேவை தொடங்கியது.

இதுகுறித்து மாநிலப் போக்குவரத்து துறை அமைச்சர் பி. அஜய் கூறுகையில்,

தொற்றின் பரவல் குறைந்ததை அடுத்து ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத் நகரங்களில் 25 சதவீத பேருந்து சேவையை முதற்கட்டமாக இன்று தொடங்கியுள்ளோம், மேலும் தற்போதுள்ள சூழ்நிலைப் பொறுத்து சேவைகள் அதிகப்படுத்தப்படும்.

ஹைதராபாத் பெருநகரத்தில் உள்ள 2,900 பேருந்துகளில் 650 பேருந்துகள் மட்டும் வெள்ளிக்கிழமை இயக்கப்பட்டுள்ளது. 

பேருந்துகள் இயக்கப்பட்டதன் மூலம் தினக்கூலி மற்றும் பணிகளுக்கு செல்வோர்கள் சென்றுவர உதவியாக இருக்கும் என தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.