விழுப்புரத்தில் கரோனா வார்டில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் மரணம்

விழுப்புரத்தில் கரோனா வார்டில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் மரணம்

விழுப்புரம் மாவட்டத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 51 வயது சேர்ந்த தலைமை ஆசிரியர் ஒருவர் உயிரிழந்தார்.

விழுப்புரம் சிங்காரத்தோப்பு சேர்ந்த தலைமை ஆசிரியர் அப்துல் ரகுமான்(51) கரோனா தொற்றில் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தவர். இவர் புதுதில்லி தப்லீக் மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பியர்.

விழுப்புரம் சிங்காரத்தோப்பு சேர்ந்த அப்துல் ரகுமான் (51), தில்லி தப்லீக் மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பியர், உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தார். அவரது உடல் விழுப்புரம் சிங்காரத்தோப்பு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 67 பேர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சனிக்கிழமை ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com