சிவகாசி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் நான்கு செவிலியர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிவகாசி அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கு 140 படுக்கையில் அமைக்கப்பட்டுள்ளன. இதில் தற்போது 90 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் உள்ளனர்.
இந்நிலையில், அரசு மருத்துவமனையில் பணிபுரியும் நான்கு செவிலியர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு காரோனோ மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் நான்கு பேரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.