எந்தவொரு மாநிலத்தின் மீதும் எந்த மொழியும் திணிக்கப்படாது என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உறுதியளித்துள்ளார்.
'தேசம் வெல்ல தேசிய கல்விக்கொள்கை' என்ற பிரதமர் நரேந்திர மோடியின் உரையை முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சுட்டுரையில் பகிர்ந்திருந்தார்.
அதனை மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் சுட்டுரையில் மறுபதிவு செய்து, 'தேசிய கல்விக் கொள்கை (NEP)-ஐ நடைமுறைப்படுத்துவதற்கான உங்கள் வழிகாட்டலை எதிர்பார்க்கிறோம். மத்திய அரசு, எந்தவொரு மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் திணிக்காது என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்' என பதிவிட்டுள்ளார்.