தீரன் சின்னமலை நினைவு நாள்: அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை  

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 215 வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த ஓடாநிலையில் உள்ள மணி மண்டபத்தில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு 
தீரன் சின்னமலை நினைவு நாள்: அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை  

          
ஈரோடு: சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 215 வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த ஓடாநிலையில் உள்ள மணி மண்டபத்தில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தற்போது கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் இன்று நினைவு நாள் மிக எளிமையாக கொண்டாடப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் ஐந்து பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தலைமையில் 500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் . 

கொங்கு பேரவை சார்பில் ஓடாநிலையில் உள்ள அவரது சிலைக்கு மாநிலத்தலைவர் தனியரசு எம்.எல்.ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  பாரதி ஜனதா கட்சி சார்பில் ஓடாநிலையில் உள்ள அவரது சிலைக்கு மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணி தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாநில துணை தலைவர் கலைச்செல்வன் மாவட்ட பொதுக் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பரமசிவம், இளைஞர் அணி தாமோதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

இதேபோல் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஓடாநிலையில் உள்ள சிலைக்கு மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாநில வர்த்தக அணி செயலாளர் சரவணகுமார் வட்டார தலைவர் சுரேஷ் மாவட்ட செயலாளர் ரபீக் இளைஞரணி செயலாளர் பூந்துறை வெற்றி உட்பட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதைப்போல் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஓடாநிலையில் தீரன் சின்னமலை சிலைக்கு மாநில துணைப் பொதுச் செயலாளர் பரமேஸ்வரன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாநில துணைத்தலைவர்கள் எஸ்.எல் பரமசிவம் எம்.பி. வெங்கடாசலம் வடிவேல், மாவட்ட செயலாளர்கள் ராசு, பிரபு உட்பட பலர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.ஒவ்வொரு ஆண்டும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அதன் தலைவர் ஜிகே மணி ஓடா நிலைக்கு  நேரடியாக வந்து தீரன் சின்னமலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார் ஆனால் இந்த ஆண்டு கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வரவில்லை. இதைப்போல் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இளைஞரணி தலைவர் சூரியமூர்த்தி பொருளாளர் கே கே சி பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஈரோடு மணல்மேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் தீரன் சின்னமலையின் நினைவு நாளை ஒட்டி தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி தலைமையில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் ,சச்சிதானந்தம் மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர் விசி சந்திரகுமார் முன்னாள் எம்.பி கந்தசாமி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.இ. பிரகாஷ் தலைமை கழக பேச்சாளர் இளைய கோபால் முன்னாள் நகர செயலாளர் பொன்னுசாமி உட்பட பலர்  கலந்து கொண்டனர்.

இதைப்போல் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கட்சி அலுவலகத்தில் தீரன் சின்னமலை நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் தலைமையில் நிர்வாகிகள் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் எம்எல்ஏ ஆர்.எம் பழனிச்சாமி மாநில செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், வட்டார தலைவர் முத்துக்குமார் பொருளாளர் ரவி சிறுபான்மை வினோத்குமார் நிர்வாகிகள் சிவகுமார் ரவி ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் உள்ள மதிமுக கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் பொருளாளரும், ஈரோடு எம்.பி.,யுமான கணேசமூர்த்தி தலைமையில் தீரன் சின்னமலையின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், மாவட்ட செயலாளர் குழந்தைவேலு, மாநகர் மாவட்ட செயலாளர் பெரியசாமி, ஒன்றிய செயலாளர் கோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com