நாட்டின் தலைநகரான புதுதில்லியில் மின்சார வாகன கொள்கையை வெள்ளிக்கிழமை அன்று வெளியிட்டார் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
இதுகுறித்து தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியது,
தேசிய தலைநகரின் பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கவும், மாசு அளவைக் கட்டுபடுத்தவும் மின்சார வாகனக் கொள்கையை தில்லி அரசு வெளியிட்டிருக்கிறது.
இந்த மின்சார வாகனக் கொள்கை நாட்டின் மிக முற்போக்கான கொள்கையாகும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5 லட்சம் புதிய மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்படும் என்று நம்புகிறோம்.
மின்சார வாகனக் கொள்கையை செயல்படுத்த ‘மின்சார வாகன அமைப்பு’ நிறுவப்படும் என்று அவர் கூறினார்.