பாகிஸ்தான் : பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 531 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 2,85,191 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் செவ்வாயன்று தெரிவித்துள்ளது.
கரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 15 பேர் பலியாகியுள்ளதால் இறப்பு எண்ணிக்கை 6,112 ஆக உயர்ந்துள்ளது.
தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 2,61,246 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், 780 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 18,227 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்தம் 21,65,811 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.