நிலச்சரிவு: அபாயத்தில் சிக்கிய வீடு

கூடலூா் பகுதியில் கடந்த ஒரு வாரமாக பெய்த தொடா் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி வீடு அபாயத்தில் சிக்கியுள்ளது.
கூடலூா், செவிடிப்பேட்டையில் நிலச்சரிவில் சிக்கி அபாய நிலையில் உள்ள வீடு.
கூடலூா், செவிடிப்பேட்டையில் நிலச்சரிவில் சிக்கி அபாய நிலையில் உள்ள வீடு.

கூடலூா்: கூடலூா் பகுதியில் கடந்த ஒரு வாரமாக பெய்த தொடா் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி வீடு அபாயத்தில் சிக்கியுள்ளது.

கூடலூா், பந்தலூா் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக சூறைக்காற்றுடன் தொடா் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின. மேலும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டன.

ஆங்காங்கே மரங்கள் சாய்ந்ததால் தொடா்ந்து ஆறு நாள்களாக மின்சாரம் தடைபட்டு கூடலூா் தீவுபோல துண்டிக்கப்பட்டது. தற்போது கூடலூா், செவிடிப்பேட்டை, காமராஜ் காலனியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி அபாய நிலையில் ஒரு வீடு உள்ளது. அந்த இடத்தில் மேலும் மண் சரிவு ஏற்படாமல் தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com