நவி மும்பையில் உபயோகித்த அறுவைசிகிச்சை கையுறைகளை சுத்தம் செய்து மறு விற்பனை செய்ய முயன்ற கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர்.
மகாரஷ்டிர மாநிலம் நவி மும்பையின் பாவ்னே பகுதியில் ஒரு குடோனில் குற்றப்பிரிவு காவல்துறையினர் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனர்.
அங்கு உபயோகித்த அறுவைசிகிச்சை கையுறைகளை கழுவி சுத்தம் செய்து மரு விற்பனை செய்ய வைக்கப்பட்டிருந்த 3 டன் கையுறைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், இந்த செயலில் ஈடுபட்ட கும்பலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.