புது தில்லி: நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 68,898 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 29 லட்சத்து 05 ஆயிரத்து 824 ஆக அதிகரித்தது. கரோனா தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கையும் 54,849 -ஆக அதிகரித்தது.
நாட்டில் கரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 68,898 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது; அதே கால அளவில் 983 போ் உயிரிழந்தனா். இதனால், ஒட்டுமொத்தமாக கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 54,849-ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நோய்த்தொற்றுக்காக 6,92,028 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 21,58,947 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தகவலின்படி, ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரை 3,34,67,237 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் நேற்று வியாழக்கிழமை மட்டும் 8,05,985 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பாதிப்பு: 29,05,824
பலி: 54,849
குணமடைந்தோர்: 21,58,947
சிகிச்சை பெற்று வருவோா்: 6,92,028