புதிதில்லி: தில்லியில் துப்பாக்கிச்சூடு நடத்திய ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஒரு பயங்கரவாதியை சனிக்கிழமை தில்லி சிறப்புப் பிரிவு காவல்துறையினர் அதிரடியாக கைது செய்கு அவரிடம் இருந்த ஏராளமான மருந்துகள், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றினர்.
தில்லி தவுலாகான் பகுதியில், வெள்ளிக்கிழணை இரவு மர்ம நபர் ஒருவர் ஆயுதங்களுடன் செல்வதாக சிறப்புப் பிரிவு காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் காவல்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது, கரோல்பாக்கில் இருந்து தவுலாகான் செல்லும் ரிட்ஜ் சாலையில் சந்தேகப்படும்படியாக வந்த நபரை மடக்கினர். அப்போது அந்த நபர் காவலர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தப்பிச் செல்ல முயன்றார். உடனே சுதாரிக்கொண்ட காவலர்கள் அவரை சுற்றி வளைத்து பதில் தாக்குதல் நடத்தி, அந்த நபரை கைது செய்தனர். அவரிடம் இருந்த வெடி மருந்துகள், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் அவர் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவர் தில்லி லோதி காலனியில் உள்ள சிறப்பு படை அலுவலகத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்றுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.