ஸ்ரீநகர்: கரோனாவால் மத்திய ரிசர்வ் காவல் படை வீரர் பலி

ஸ்ரீநகர் மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மத்திய ரிசர்வ் காவல் படை வீரர் இன்று பலியானார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஸ்ரீநகர் மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மத்திய ரிசர்வ் காவல் படை வீரர் இன்று பலியானார்.

மத்திய ரிசர்வ் காவல் படையின் 162-வது படையைச் சேர்ந்த 45 வயதான வீரர் ஒருவர் கடந்த 6 நாள்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை சிகிச்சைப் பலனின்றி பலியானார்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் பணிபுரியும் பாதுகாப்புப் படை வீரர்கள் 10-க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பலியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com