ஸ்ரீநகர் மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மத்திய ரிசர்வ் காவல் படை வீரர் இன்று பலியானார்.
மத்திய ரிசர்வ் காவல் படையின் 162-வது படையைச் சேர்ந்த 45 வயதான வீரர் ஒருவர் கடந்த 6 நாள்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை சிகிச்சைப் பலனின்றி பலியானார்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் பணிபுரியும் பாதுகாப்புப் படை வீரர்கள் 10-க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பலியானது குறிப்பிடத்தக்கது.