செளதி அரேபியாவில் இடைநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி நேரம் காலை 7 மணிக்கு பதிலாக காலை 9 மணிக்கு தொடங்க என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து கல்வித்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இந்த நேர மாற்றம் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் வசதிக்காக மாற்றப்பட்டுள்ளது.
செளதில் உள்ள பள்ளிகளின் நேரம் காலை 7 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை இயங்கும். தற்போது பள்ளிகள் தொடங்கும் நேரம் மட்டும் காலை 9 மணியாக மாற்றப்பட்டுள்ளது என கூறினார்.
மேலும், புதிய கல்வியாண்டின் முதல் 7 வாரங்கள் இணையவழியாக தொடரும். பள்ளிகள் திறக்கும் தேதி குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
கரோனா தொற்று காரணமாக சவுதி அரேபியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கடந்த மார்ச் 9 முதல் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.