தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் செவிலியர்கள் இன்றுமுதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து தில்லி எய்ம்ஸ் செவிலியர்கள் சங்கம் வெளியிட்ட செய்தியில்,
6வது மத்திய ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (திங்கள்கிழமை) மதியம் முதல் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை செவிலியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் எனத் தெரிவித்துள்ளனர்.