ஜம்மு - காஷ்மீரில் வியாழக்கிழமை காலை நடத்தப்பட்ட தூப்பாக்கிச்சூட்டில் தீவிரவாதி ஒருவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக காஷ்மீர் மண்டல காவல்துறை தெரிவித்துள்ளது.
பாரமுல்லாவின் வானிகம் பயீன் கிரீரி பகுதியில் வியாழக்கிழமை காலை பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
இதில், அடையாளம் தெரியாத தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.