இந்தோனேசியாவில் நில நடுக்கம்: ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவு

இந்தோனேசியாவில் வெள்ளிக்கிழமை அதிகாலை காலை நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.4 அலகாக பதிவாகி உள்ளதாக
இந்தோனேசியாவில் நில நடுக்கம்: ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவு

ஜகார்த்தா:  இந்தோனேசியாவில் வெள்ளிக்கிழமை அதிகாலை காலை நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.4 அலகாக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்  கூறியதாவது: வடமேற்கு இந்தோனேசியாவின் சுமார் 229 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சயூம்லாகி பகுதியில்  வெள்ளிக்கிழமை அதிகாலை 3.24 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.4 அலகாக பதிவாகி உள்ளது. இந்த நடுக்கமானது 157 கிலோமீட்டர் ஆழத்தில் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. 

இந்த நிலநடுக்கத்தினால் எந்த உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் இல்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com