நாகையில் குடியுரிமைத் திருத்தச் சட்ட ஆதரவு பேரணி: திரளானோர் பங்கேற்பு

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்து பாஜக சார்பில் நாகையில் பேரணி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. 
நாகையில் குடியுரிமைத் திருத்தச் சட்ட ஆதரவு பேரணி: திரளானோர் பங்கேற்பு

நாகப்பட்டினம்: குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்து பாஜக சார்பில் நாகையில் பேரணி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. 

நாகை நாலுகால் மண்டபம் அருகிலிருந்து தொடங்கிய இந்தப் பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியே சென்று நாகை அவுரித் திடலில் நிறைவடைந்தது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்தும், தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்த கோரியும், திமுகவைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.கே. வேதரத்தினம், கோட்டப் பொறுப்பாளர் வரதராஜன், மத்திய அரசு வழக்குரைஞர் கே. ராஜேந்திரன், பாஜக மாவட்டத் தலைவர்கள் கே. நேதாஜி, வெங்கடேசன் மற்றும் பாஜக, ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள், தெண்டர்கள் திரளானோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com