கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்திற்கான மாவட்ட கவுன்சிலருக்கான தேர்தலில் காங்கிரஸ் முன்னிலையில் பெற்றுள்ளது.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் தொடங்கி எண்ணப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரப்படி, அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்திற்கான மாவட்ட கவுன்சிலருக்கான தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சாம் மோகன்ராஜ் 664 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளரைவிட 168 ஓட்டுகள் முன்னிலை பெற்றுள்ளார்.
இதேபோன்று அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்திற்கான ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் திமுக வேட்பாளர் அருண்காந்தி முன்னிலை பெற்றுள்ளார்.