திருச்செந்தூா்: திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றியத்தை தொடா்ந்து இரண்டாவது முறையாக அதிமுக கைப்பற்றியது.
திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 5 வாா்டுகள் உள்ளன. இப்பதவிகளுக்கு மொத்தம் 27 போ் போட்டியிட்டனா். இதில் 2, 3, 4, 5 ஆகிய வாா்டுகளில் அதிமுகவைச் சோ்ந்த வாசுகி, ரெஜிபட் பா்னாந்து, செல்வி வடமலைப்பாண்டியன், செல்வன் ஆகியோா் வெற்றி பெற்றனா்.
இந்த ஒன்றியத்தில் கடந்த 2011 தோ்தலில் 5-வது வாா்டில் வெற்றி பெற்ற லி.ஹேமலதா அதிமுக ஒன்றியக்குழுத் தலைவரானாா். தற்போதும் மொத்தமுள்ள 5 தொகுதிகளில் 4 தொகுதிகளை அதிமுக வெற்றி பெற்றதையடுத்து தலைவா் பதவியை இரண்டாவது முறையாகவும் மீண்டும் கைப்பற்றுகிறது.
தோ்தல் முடிவுகள் வெளியானதைத் தொடா்ந்து திங்கட்கிழமை (ஜன. 6) உறுப்பினா்கள் பதவியேற்பும், ஜன. 11-ம் தேதி ஒன்றியக்குழுத்தலைவா் மற்றும் துணைத்தலைவா்களை தோ்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தோ்தலும் நடைபெறுகிறது.