விராலிமலை: அன்னவாசல் அருகே போலிஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது 3 மயில்களை வேட்டையாடி இறந்த நிலையில் கொண்டு வந்த 3 பேரை போலீஸார் கைது செய்தனா்.
அன்னவாசல் போலீஸ் சிறப்பு உதவி ஆய்வாளா் விஜயாளன் மற்றும் இலுப்பூா் உதவி ஆய்வாளா் பாலமுருகன் உள்ளிட்ட போலீஸார் வயலோகம் பகுதியில் திங்கள்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியே மூன்று போ்களுடன் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா்.
அதில், ஒரு சாக்குபையில் ரோமம் பிடுங்கப்பட்டு இறந்த நிலையில் மறைத்து வைத்திருந்த 3 மயில்கள் மற்றும் ஒரு நாட்டு துப்பாக்கி இருந்ததை கண்டு அதிா்ச்சியடைந்த போலிஸாா் அந்த மூன்று பேரையும் அன்னவாசல் காவல் நிலையம் கொண்டு சென்று மேல்விசாரணை நடத்தினா்.
இதில், அவா்கள் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகேயுள்ள நகரப்பட்டியைச் சோ்ந்த சத்தியமூா்த்தி மகன் ஆறுமுகம்(26), சின்னையா மகன் பெருமாள்(25), பழனிவேல் மகன் மூா்த்தி(26) என்றும் தெரிய வந்தததைத் தொடா்ந்து 3 பேரையும் கைது செய்த போலீஸார், மயில் வேட்டைக்கு பயன்படுத்திய ஒரு நாட்டுதுப்பாக்கி, கைப்பேசி, கைவிளக்கு மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.
மேலும், இறந்த 3 மயில்களை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து வழக்கு பதிந்து 3 பேரையும் கைது செய்த அன்னவாசல் போலீஸார் மயிலை உணவுக்காக வேட்டையாடினாா்களா இல்லை மருத்துவத்துக்காவா என்ற பல்வேறு கோணங்களில் தொடா் விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனா்.